அன்புள்ள பேராண்டிக்குத் தாத்தா எழுதுவது.
நலம். நலமறிய அவா.
நானும் பாட்டியும் இந்தியாவில் செளக்கியமாக இருக்கிறோம்.
உன்னுடைய சமீபத்திய போட்டோவைப் பார்த்தோம்.
நீ கிடுகிடுவென்று வளர்ந்து விட்டிருக்கிறாய். மகிழ்ச்சி.
நீ இப்பொழுது ஒரு “டீன் ஏஜர்”,
அதாவது, பாட்டி சொல்வதுபோல், ஒரு “இரண்டுங்கெட்டான்.”
உன் வயதுப் பையன்கள் போல் உனக்கும் பிடிவாதம், எரிச்சல், கோபம்
இத்யாதி, நிறைய இருப்பதாக உன் அப்பாவும் அம்மாவும்
வருத்தப்படுகிறார்கள். எப்படி உனக்குப் புத்திமதி சொல்வது என்று
அவர்களுக்குத் தெரியவில்லையாம். என் மேலே
அந்தச் சுமையை இறக்கி வைத்திருக்கிறார்கள்.
நான் உனக்கு “அட்வைஸ்” பண்ணப்போகிறதில்லை.
இந்த உலக யதார்த்தத்தைச் சில வார்த்தைகளில்
உனக்குச் சுட்டிக்காட்டப்போகிறேன்.
நான் இங்கு சொல்லப்போகும் விஷயங்களை
உன் பள்ளிக்கூட ஆசிரியர்கள்
சொல்லித்தந்திருக்க மாட்டார்கள்.
இது ஒரு வாழ்க்கைப் பாடம்.