Monday, January 30, 2012

உண்மை ஒன்றுதான், வழிகள் பலவிதம்!

எல்லா மதங்களின் சாராம்சமும் ஒன்றுதான். 
இதோ ஒரு உதாரணம்.

மற்றவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் 
என்பதைப் பற்றி எல்லா மதங்களும் 
ஒரே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன.

The Golden Rule என்று சொல்லப்படும். 
பின்பற்றத்தக்க மிகச் சிறந்த நன்னெறி சொல்கிறது
Treat others as you want to be treated. 
உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் 
என்று ஆசைப்படுகிறாயோ அதே மாதிரி 
நீயும் மற்றவர்களை நடத்து.

இது ஒரு உயர்ந்த moral code of ethics. 
பலதரப்பட்ட கலாச்சாரங்களின் மீது இந்த விதி 
செல்வாக்கு செலுத்திவந்திருக்கிறது. 
இதற்கு ethics of reciprocity 
என்றும் பெயர் உண்டு. 
நமக்கும் நம்மைச் சார்ந்த நபர்களுக்கும் 
இருக்கும் உறவு இருவழிப் பாதை போன்றது. 
ஒருதலைப்பட்ட தொடர்பு அல்ல. 
ஒரு சமமான தொடர்பு. 
இந்தத் தொடர்பைப் பற்றி 
வெவ்வேறு துறையினர் 
விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மதங்களோ இந்த நன்னெறி முறையை 
வேறுபாடில்லாமல் ஒத்துக்கொண்டிருக்கின்றன.