நாம் பார்க்கும், ரசிக்கும், அனுபவிக்கும் எல்லா
பொருள்களையும்விட அதிக மதிப்புள்ள பொருள் -
நேரம்.
“நேரமே இல்லை”, “மூச்சு விடக்கூட நேரமில்லை”,
“முழி பிதுங்குகிறது”, “24 மணி நேரம் போதல” -
என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம்.
ஏன், நாமே, பல சமயங்களில் புலம்பியிருக்கிறோம்.
அதற்குத் தலையாய காரணம், நம்மில் பல பேருக்கு -
Time Management —- நேரத்தை எப்படி திட்டமிட்டுச்
செலவழிப்பது என்ற கலை தெரியாததுதான்.
ஒரு பொருளை மதித்து அதற்காக ஏங்குவதுபோல்,
ஏன் நேரத்தையும் ஒரு பொருளாகக் கருதி
அதை மதிப்பதில்லை?
ஒருவேளை, அதற்கு நாம் ஒரு விலை நிர்ணயம்
பண்ணாத காரணமா?
அதற்கு ஒரு விலை வைப்போமே...