Monday, February 27, 2012

வாழ்க்கையும் உலகநீதியும்


வாழ்க்கை என்பது என்ன?

தத்துவ விளக்கத்தில் ஈடுபடாமல் யோசித்தால்
வாழ்க்கை பல பரிமாணங்களைக் கொண்ட 
ஒரு விஷயம் என்பது புலப்படும். 
பல கோணங்களில் இந்தப் பரிமாணங்களை 
அலசலாம், வெவ்வேறு கோணங்கள் வெவ்வேறு 
தோற்றங்களைக் கொடுக்கும். 
அது பார்ப்பவரின் பார்வையையும் 
மனநிலையையும் பொறுத்தது. 
ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர். 
எல்லோரும் ஒரே விதத்தில் ஒரு பொருளைப் 
பார்ப்பதும் இல்லை. சிந்திப்பதும் இல்லை.

உதாரணமாக, வாழ்க்கை ஒருவருக்குச் 
சவலாக இருக்கும். 
இன்னொருவர் அதை ஒரு விளையாட்டாக 
எடுத்துக்கொள்வார். 
மற்றொருவர் அதைப் புதிராகக் கருதலாம்.

வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் 
அந்த வித்தியாசமான பரிமாணங்களை 
ஒருவர் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதைக் 
கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

வாழ்க்கை என்பது என்ன?
(What is life?)