Sunday, May 13, 2012

தெரிந்த தமிழ் - தெரியாத புலவர்கள் 3


இரட்டைப் புலவர்கள்

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த இரண்டு 
புலவர்கள் பிறப்பில் இரட்டையர்கள் அல்ல. 
அத்தை மகன், அம்மான் மகன் உறவு 
முறையில் சேர்ந்து வாழ்ந்தவர்கள்.

சோழ நாட்டில் ஆலந்துறையில் செங்குந்தர் 
வேளாளர் குலத்தில் பிறந்தவர்கள். 
ஒருவருக்குப் பிறவியிலேயே கண் 
பார்வை கிடையாது. மற்றவருக்குக் கால்கள் 
கிடையாது. பெற்றோர்களுக்குக் கவலை. 
பெரியவர்கள் குழந்தைகளை ஊனம் இருந்தாலும் 
ஞானம் மிகப் பெற்று, ஞாயிறு போன்று 
பிரகாசித்து, ஞாலத்தை (தேசத்தை) வலம் 
வருவார்கள்என்று வாழ்த்தினார்கள். 
முன்னவருக்கு முதுசூரியர் என்றும் 
இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் 
பெயரிட்டனர்.