சுயநலமற்ற சமூக சேவையைப் பற்றி
இந்த வாரம் எழுதுவதாக சொல்லிவிட்டு,
இது என்ன புது ‘சப்ஜக்ட்’ என்று கேட்கலாம்.
நியாயமான கேள்வி.
பதில் - ‘இது அதேதான்.’
ஒரு சிறு விளக்கம்:
இந்த ‘ஒப்புரவு’ தற்காலத் தமிழ்
அகராதிகளில் காணப்படவில்லை.
இந்தச் சொல் புழக்கத்தில் இல்லாதுதான்
காரணம். ஆனால், இதை உபயோகித்தவர்
சாதாரண பேர்வழியில்லை.
சாட்சாத் வள்ளுவர் பெருமான்தான்.
இந்த வார்த்தையை ஒரு அதிகாரத்திற்குத்
தலைப்பாக வைத்து 10 குறள்களில்
இதன் அவசியத்தை வலியுறுத்திருக்கிறார்.
(அத்தியாயம் 22: 211-220)
ஒப்புரவு அறிதல் என்பதன் பொருள்:
உன் சமூகத்திற்கு நீ செய்ய வேண்டிய கடமை.