Wednesday, November 07, 2012

எதிர்மறையாகவே இயங்கும் உலகத்தில் நம்பிக்கையுடன் (Positive) வாழ்வது எப்படி?



சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்: 
"ஒரு நாளில்நீங்கள் எந்தப் 
பிரச்சினையையும் சந்திக்கவில்லை 
என்றால்நிச்சயமாக நீங்கள் 
ஏதோதப்பான வழியில் 
பிரயாணம் செய்துகொண்டிருக்கிறீர்கள்."
(In a day, when you don't come 
across any problem, 
you can be sure that 
you are travelling a wrong path)
சுவாமிஜி இதை ஒரு ஜோக்காகச் 
சொல்லியிருக்க மாட்டார். 
சொன்னது
அவர் வாழ்ந்த வாழ்க்கைச் 
சூழ்நிலையில்
அதாவது 100 ஆண்டுகளுக்கு 
முன்னால். 
"பிரச்சினை இல்லாத மனித வாழ்க்கை 
இருக்க முடியாது" என்று சொன்ன 
சுவாமிஜி
பிரச்சினையே வாழ்க்கையாக 
மாறிவிட்டிருக்கும் 
இந்தக் காலத்தைப் பற்றி 
எப்படி வர்ணித்திருப்பார்?
அலுத்து, வெறுத்துப்போன சூழ்நிலை-  
எங்கு திரும்பினாலும். 
ஒரு லிஸ்ட் போடலாம் என்றால்
எவ்வளவு நீளம் அது போகும்
எதைச் சேர்க்கணும்
விலைவாசி, பவர்கட்
பெட்ரோல் விலைசுகாதாரம்
கொலை, கொள்ளை
கற்பழிப்புஏமாற்றல்
ஒழுங்கின்மைலஞ்சம்
கோவில் சொத்து திருடுபோவது
scandals, scams  etc... etc...
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு 
விதத்தில் வெவ்வேறு பரிமாணத்தில் 
இந்தப் பிரச்சினைகள் தாக்குகின்றன.
"சர்வம், பிரம்ம மயம் ஜகத்" — 
இந்த உலகம் முழுவதும் 
"பிரம்மம்" என்பது வேத வாக்கு. 
இன்றைய புது மொழி: 
"சர்வம் டென்ஷன் மயம் ஜகத்". 
எல்லாமே டென்ஷன்’. 
டென்ஷன்’ வந்தால் stress. 
stress வந்தால் 
எல்லா வியாதிகளும் 
தேடி வரும். 
நிம்மதி போய்விடும்.
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” 
என்று பாடத் தோன்றும்.
இப்படி இருக்கிற 
எதிர்மறை உலகில் 
எப்படி நிம்மதி கிடைக்கும்
எப்படி பாஸிடிவாக வாழ முடியும்?
தர்மர், அரிச்சந்திரன் போன்ற 
புராணகால மனிதர்களால் 
இன்றைய சூழ்நிலையில் 
வாழ முடியுமா?
முடியும்- என்கிறார்கள், 
மகான்கள்படித்த பெரியோர்கள். 
சொல்லில் மாத்திரம் இல்லை
வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள்.
இந்தப் பெரியோர்கள் சொல்லும் 
வழி ரொம்ப சிம்பிள்.