Saturday, February 02, 2013

பெரு நாட்டில் நவராத்திரி - பகுதி 4 மாச்சு - பிச்சு














மாச்சு-பிச்சுவைப்பற்றித் 
தமிழர்களின் பொது அறிவு 
ஆழத்தைத் தீர்மானிப்பது   
எ.மு., எ.பி. என்ற இரண்டு 
காலகட்டங்கள். 
கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்)
கி.பி. (கிறிஸ்துவுக்குப் பின்) 
என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதென்ன எ.மு., எ.பி?
எ.மு. என்றால், எந்திரன் படம் 
வருவதற்கு முன்
எ.பி. என்றால் எந்திரன் 
படத்திற்குப் பின். 
திரைக்கு வந்து சில மணி 
நேரங்களிலேயே பரபரப்பாகப் 
பேசப்பட்ட மெகா ஹிட் திரைப்படம்எந்திரன். 
இந்தப் படம் வெளிவருவதற்கு 
முன் மாச்சு-பிச்சுவைப் பற்றித் 
தெரிந்த தமிழர்கள்
ஒரு negligible minority 
ஆகத்தான் இருந்திருப்பார்கள்.

எந்திரன் படம் வந்தது. 
அதில் வரும் "கிளிமஞ்சாரோ" 
என்ற பாடல் ஒரு super hitஆக 
ஆயிற்று. 
அந்தப் பாடல் எடுக்கப்பட்ட 
locationஐப் பற்றிப் பேசாத
எழுதாத மீடியாக்களே இல்லை.
அந்த locationதான் 
மாச்சு-பிச்சு என்று தெரிந்தவுடன்
அடித்தது யோகம் 
மாச்சு-பிச்சுவுக்கு. 
எங்கேயோ,தென் அமெரிக்காவில் தூங்கிக்கொண்டிருந்த 
மாச்சு-பிச்சுவுக்குத் 
தமிழ் சினிமா ரசிகர்களிடம்
குறிப்பாக ரஜினி ரசிகர்களிடம்
பயங்கர வரவேற்புக் கிடைக்க 
ஆரம்பித்தது.
"நான் தமிழ்ப் படமெல்லாம் 
பார்ப்பதில்லை" என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் 
தன்மானத் தமிழர்களுக்காக 
இதோ, அந்தப் பாட்டு 
ஒளி, ஒலி வடிவில்.
இப்பொழுது
மாச்சு-பிச்சுவைப் பற்றிக் 
கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

மாச்சு பிச்சு (இன்கா பாஷையான, Quechuaவில் Machu Pikchu என்று அழைக்கிறார்கள்) 
தென்அமெரிக்காவில் உள்ள 
பெரு நாட்டில் இருக்கும் 
ஒரு புராதானமான இன்கா 
கலாச்சார மையம். 
சுமார் 8000 அடி உயரத்தில் 
உருபாம்பா பள்ளத்தாக்கிற்கு 
மேலே இருக்கிறது. 
குஸ்கோ நகரிலிருந்து 
50 மைல் தூரத்திலிருக்கிறது. 
இதன் வழியாக உருபாம்பா நதி 
ஓடுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி 
பச்சசூடி (Pachacuti) என்ற 
இன்கா சக்ரவர்த்தியால் 
1438, 1472 ஆண்டுகளில் கட்டப்பட்ட 
ஒரு Estate இது. 
இன்கா உலகத்திற்கே 
இது ஒரு அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.

ஸ்பானியர்கள் ஆக்கிரமிப்புக்குப் 
பிறகு இதைப் பற்றி யாருக்கும் தெரியாமலேயே இருந்துவந்திருக்கிறது. 
1911ஆம் ஆண்டு Hiram Buighan 
என்ற ஒரு அமெரிக்க சரித்திர ஆசிரியர் இதைக் கண்டுபிடித்தார். 
இப்பொழுது இது ஒரு கலாச்சார 
இடமாக அறிவிக்கப்பட்டு நிறைய பயணிகளை வரவேற்கும் 
மையமாக ஆகியிருக்கிறது.

இந்த மாச்சு-பிச்சு 2007இல் 
ஒரு Internet Pollஇல் உலக 7 அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இப்பேர்ப்பட்டப் பிரசித்தமான, புராதனமான இடத்தில்தான் 
எங்கள் பயணத்தின் கடைசி 
நாட்களைக் கழித்தோம்.
பயணக் கட்டுரையைத் 
தொடருவோமா?