Tuesday, April 09, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி - 1


அறிமுகம்                                                          

                                                                             
                                                                       
நைமிசாரண்ய காடு புனிதமான 
ஸ்தலம். ரிஷிகள் கூடி ஜப,தப 
மற்றும் யாகங்கள் செய்யும் இடம். பிரவசனம் (உபன்யாசம்) கேட்க 
ரிஷிகள் கூடியிருந்தார்கள்.

















முதல் பிரவசன குரு - 
சூத மகரிஷி. 
வேத வியாசர் மகனான 
சுக மகரிஷியின் சிஷ்யர். 
நாரதர் மூலம் கேட்டு, 
வேதங்களையும் புராண,மகாபாரத இதிகாசங்களையும் எழுதிய 
வியாச மகரிஷி, தன் மகன் 
சுகருக்கு உபதேசிக்க, 
அதை சுகர், சூதருக்குச் 
சொல்லிக்கொடுக்க, 
அதை சூதர், மகரிஷிகளுக்கு 
எடுத்துச் சொன்னார். 
சூதர், எல்லாப் புராணங்களையும் 
விளக்கி, ஒரு நல்ல காரியத்தைச் செய்துமுடித்த திருப்தியோடு, 
தன் சீடர்களான மகரிஷிகளைப் 
பார்த்து, "ஏதாவது சந்தேகங்கள் 
உண்டா?" என்று கேட்டார். 
எல்லோரும் ஒரே மனதாக 
"சுவாமி, புண்ணியம் அடைந்தோம். 
தங்கள் உபன்யாசங்களைக் 
கேட்டு நீங்கள் சொன்னபடி 
நடப்பதைத் தவிர வேறு சந்தேகமே கிடையாது என்றார்கள்.
சூதருக்கு இதைக் கேட்டதில் 
மகிழ்ச்சி இல்லை.
 "சீடர்களே, ஒரு சாதாரண 
மானிடனுக்கு ஏற்பட்ட சந்தேகம், உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? 
என்று நினைக்கும்போது 
வருத்தமாக இருக்கிறது" என்றார்.
ரிஷிகளுக்கு ஒரு மாதிரியாக 

ஆகிவிட்டது. 
‘எதை மறந்தோம்’ என்ற கவலையில் 
"சுவாமி, கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்கள். 
யார் அந்த மானிடன்? 
அவன் என்ன சந்தேகம் 
கேட்டான்?" 
என்று கெஞ்சினார்கள்.
சூதர் பின் வரிசையில் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்த 

ஒரு "81 வயது இளைஞரைக் 
(மற்ற ரிஷிகளைப் பார்க்கும்போது. 
அவன் இளைஞன்தான்) காட்டி 
"அதோ, அவர்தான். 
நான்தான் 
அவரை இங்கு வரவழைத்தேன். 
அவரையே நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே?" 
என்றார்.
பிறகு, அந்த மனிதரை 

முன்வரிசைக்கு வரச்சொல்லி, 
"அன்பரே, வருக, வருக, 
இந்தப் புனிதமான சபைக்கு. 
நீரே, உம்மைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு 
என் சீடர்கள் கேட்ட 
கேள்விகளுக்கு விளக்கம் 
தாரும்" என்றார்.
அந்த மானிடனும், முன்வந்து, 

பணிவுடன் 
"சூத முனிவருக்கும் 
மற்ற எல்லா ரிஷிகளுக்கும் 
என் பணிவான வணக்கம். 
உங்கள் முன் நிற்கவே 
எனக்குக் கூச்சமாக இருக்கிறது. 
சூதர் கொடுத்த தைரியத்தில் 
இங்கு வந்திருக்கிறேன். 
எனக்கு உபன்யாசம் பண்ணத் 
தெரியாது. அதனால் நாம் 
இதைக் கேள்வி-பதில் 
முறையிலேயே நடத்தலாம்.
என் பெயர்: தி.சு. பாம்பரசனார்.
என் ஊர்:திருநெல்வேலி,தமிழ் நாடு. நர்மதை நதிக்குத் தெற்குப் 

பகுதியில் உள்ளது எங்கள் நாடு. 
எங்கள் மொழி தமிழ் — 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து இருக்கும் 
மொழி. சங்கரனார் ஆரம்பித்து 
முருகப் பெருமான் ஆசியுடன் 
அகஸ்தியர் மற்றும் 
பல அறிஞர்களால் 
வளர்க்கப்பட்டத் 
தமிழ். 
சமஸ்கிருத வார்த்தை 
இல்லாமலேயே இயங்கும் 
மொழி - எங்களது தமிழ். 
தமிழில் இல்லாத விஷயமே 
கிடையாது. அப்படி ஏதாவது 
தமிழில் விடுபட்டிருந்தால் 
அது தேவையற்ற 
விஷயமாகத்தான் இருக்கும்..."
ஒரு ரிஷி இடைமறித்து 

"போதும் உங்கள் மொழிப்  
பிரதாபம். 
எங்களுக்கும் தெரியும். 
நீர் சொன்னபடி உங்கள் தமிழை 
வளர்க்க உதவியவர் எங்களில் 
ஒருத்தரான அகஸ்தியப்  
பெருமான்தானே? 
அது போகட்டும், 

அதென்ன உம் பெயர், 
தி.சு. பாம்பரசனார்.