Monday, August 05, 2013

கோயம்புத்தூர், சென்னை விஜயம்- ­சில அனுபவங்கள் -பகுதி-2


கிரிக்கெட் வீரர்களுக்கும்
கிரிக்கெட் ரசிகர்களுக்கும் 
பரிச்சயமான சொற்றொடர் - 
Nervous nineties
ஒரு பாட்ஸ்மேன் 90 ரன்கள் 
எடுத்து சதத்தை நோக்கிச் 
செல்லும்போது அவனுக்கு 
ஏற்படும் டென்ஷன்தான் 
Nervous nineties
அதுவரை அநாயாமாக 
விளையாடி வந்த நபருக்குத் 
தீடிரென்று ஒரு பயம் வந்துவிடும். 
எங்கே சாதனையான சதத்தைக் கோட்டைவிட்டுவிடுவோமோ’ 
என்று. 
அந்த டென்ஷன் அவன் 
ஆட்டத்தில் ஒரு கணிசமான 
மாறுதலை ஏற்படுத்தும். 
எதிர்க் கட்சி ஆட்டக்காரர்களும் 
அந்தப் பதட்ட நிலையைத் 
தங்களுக்குச் சாதகமாகப் 
பயன்படுத்திக்கொள்ள 
எல்லா முயற்சிகளையும் 
எடுப்பார்கள். 
என்னுடைய நிலைமையும் 
கிட்டத்தட்ட கிரிக்கெட் வீரரின் 
Nervous nineties மாதிரிதான் 
இருக்கிறது. 
நான் இந்த blogஐ ஆரம்பித்தபோது இவ்வளவு வாரங்கள் எழுதுவேன் 
என்று நினைக்கவில்லை. 
விளையாட்டுபோல் தடையில்லாமல் 
90 வாரங்கள் எழுதிவிட்டேன். 
இன்னும் 10 தானே நூறுக்கு 
என்ற நினைப்பு எவ்வளவு தவறு 
என்று புரிந்துகொண்டேன். 
உண்மையிலேயே 
Nervous ninetiesதான். 
காரணம்என்னைப் பற்றியதும் 
என் குடும்பச் சூழ்நிலையைப் 
பற்றியதுதான். நிச்சயமாக 
எதிர்க் கட்சியினரின் சதி வேலை’ 
இல்லை.

சதம் அடிக்கத் துடிக்கும் 
கிரிக்கெட் வீரரை எப்படிப் 
பொறுத்துக்கொள்வீர்களோ 
அதே மாதிரிஎன் தாமதத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

மேலே படிக்கவும்...

ஏற்கனவே எழுதியபடி
என் சென்னை விஜயத்தின்போது 
இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். இரண்டு பேருடைய கதையில் 
ஒரே ஒற்றுமை-இருவரும் call taxi ஓட்டிப் பிழைப்பை 
நடத்துபவர்கள். 
மற்றபடி இரண்டு பேரும் 
தனித்தனியாகச் 
சிந்தித்துச் செயல்பட்டுத் 
தங்கள் வாழ்க்கையை 
நடத்திவருகிறார்கள். 
இதோ அவர்களுடைய 
வாழ்க்கைக் குறிப்புகள்...