Friday, September 13, 2013

விடை தெரிந்திருக்க வாய்ப்பில்லாத சில பல கேள்விகள்



யானைக்கு நீந்தத் தெரியுமா?
பச்சோந்தி Backgroundக்கு 

ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளுமா?
நமக்கு எத்தனை உணர்வுகள் 
(senses) உண்டு?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் 
விடைகள் இருக்கிறதா?

விடை தெரியவில்லை என்றால் 
தப்பில்லை; 
தைரியமாக, 
‘கற்றது கை மண் அளவு; 
கல்லாதது உலகளவு’ என்ற 
போர்வையில் உங்கள் அறியாமையை 
மறைத்துக் கொள்ளலாம். 
ஆனால், உங்களுக்குள் இந்த மாதிரி கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள 
ஒரு ஆவல் (curiosity) இருக்கிறதா? 
அந்த ஆவல் இருந்தால் நீங்கள் 
நிச்சயமாக ஒரு மனிதப் பிறவிதான். 
ஏனெனில்,மனிதப் பிறவி ஒன்றுக்குத்தான் 
curiosity என்ற 4ஆவது பரிமாணம் 
இருக்கிறது. 
மற்ற 3 பரிமாணங்கள்—
உணவு, பாலியல், தங்குமிடம் 
(food, sex, shelter). 
இந்த மூன்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானவை. 

கழுதைக்குக் கற்பூரத்தின் வாசனை 
தெரிய வேண்டிய அவசியமில்லை. 
அதைப் பற்றி அதற்கு ஆவலும் 
கிடையாது அவசியமும் கிடையாது.

ஆக, மனித இனத்திற்கே உரியதான 
இந்த curiosity ஆவல்தான் 
மனித வாழ்க்கையை மேம்படச் செய்கிறது. 
அந்த ஆவல்தான், மனிதனைக் கேள்வி 
கேட்கத் தூண்டுகிறது.

‘கேள்வி கேட்டால்தான் 

தெளிவு பிறக்கும்.’  
இது சான்றோர் வாக்கு.

பெரிய தத்துவக் கேள்விகளிலிருந்து-
வாழ்க்கை என்பது என்ன? 
மரணம் என்றால் என்ன? 
உப்புசப்பில்லாத கேள்விகள்வர-
ரஜினிகாந்தின் காலை உணவு என்ன?, 
சினிமா நடிகை எத்தனை விவாகரத்துகள் செய்திருக்கிறாள்? 
என்று தினசரி ஆயிரக்கணக்கான 
கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான 
விடைகளும் தேடப்படுகின்றன.

இன்றைய டிஜிடல் உலகம் இந்த 

ஆர்வத்தை நன்றாகவே வளர்த்துவருகிறது.

"Who wants to be a millionnaire" 
‘Master mind’, ‘Jeopardy’, 
‘நீங்களும் கோடிஸ்வரர் ஆகலாம்’ 
‘Jack pot’ என்று 
தினசரி ஏதாவது டி.வி. சேனலில் 
Quiz Programme நடத்தி 
லட்சக்கணக்கான மக்களைக் 
கட்டிபோட்டு வைக்கிறார்கள்.

இந்தக் கேள்விகள் வாழ்க்கைக்கு 
அவசியமா?

இவற்றுக்கு  விடை தெரியாததால் 
சொர்க்கத்தை இழந்துவிடுவோமா? 
என்று கேள்விகள் கேட்காமல் 
இதை பொழுதுபோக்காகக் கருதி 
அந்த முறையில் நம்முடைய அறிவு 
கொஞ்சம் விசாலமானால் 
அது வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

அதே நோக்கத்தில் இந்தக் கட்டுரையில் 
சில கேள்விகள் தரப்பட்டுள்ளன. 
இது நிச்சயமாக Silly, useless, 
time waste என்ற வரிசையில் 
இருக்காது.

எனக்குச் சுத்தமாக இந்தக் 

கேள்விகளுக்கு 
முதலில் விடை தெரியவில்லை. 
ஆனால் இந்தக் கேள்விகளின் 
பதில்கள் ஒரு புதிய அறிவைக் 
கொடுத்தது. 

அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 

"By ignorance, the truth is known" 
Henry Suso (1300 - 65) 

இப்போது கேள்விகளுக்குப் போகலாமா?

கேள்வி 1
இந்த உலகத்திலேயே பயங்கரமான 
விலங்கு எது?